Sunday, September 22, 2024

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு – 2 பயங்கரவாதிகள் பலி

by rajtamil
Published: Updated: 0 comment 8 views
A+A-
Reset

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்நகர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அங்கிருக்கும் மற்றொரு பயங்கரவாதியை பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 6 மாதங்களில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடையே 6-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் ஏப்ரல் 28-ந்தேதி ஒரு கிராம பாதுகாப்பு காவலரும், ஆகஸ்ட் 19-ந்தேதி ஒரு சி.ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024