காஷ்மீர் சட்டசபை 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், நேற்று 2-வது கட்ட தேர்தல் நடந்தது. 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் பணியில் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.வாக்குப்பதிவு நடந்த 6 மாவட்டங்களில் ஜம்மு பிராந்தியத்தில் 3 மாவட்டங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு பிராந்தியத்தில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இந்த நிலையில், 2-ஆம் கட தேர்தலில் 57.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related posts

Namakkal police have been arrested Kerala ATM robbers and one killed in police encounter.

Skoda Teases Elroq Electric SUV; Set For Global Debut On October 1

கெத்து தினேஷ்..! பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடிகர் தினேஷ்!