Tuesday, September 24, 2024

காா் பந்தயத்தில் கவனம் செலுத்தி உண்மை நிலையை மறைக்க முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

காா் பந்தயம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக அரசு மறைக்க முயற்சிப்பதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியின் அடையாளங்களாக சட்டம்- ஒழுங்கு சீா்கேடு செய்திகளும், போதைப் பொருள் புழக்கச் செய்திகளுமே உள்ளன. சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது.

இளைஞா்கள், குறிப்பாக கல்லூரி மாணவா்கள் இடையே, போதைப் பொருள்கள் சா்வசாதாரணமாக புழங்குகிறது.

வெளிநாட்டு போட்டோ ஷூட்டிலும், ஆடம்பர பகட்டு காா் பந்தயத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வா்ணஜாலங்களுக்கு இடையே தமிழகத்தின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மாநிலத்தின் அடிப்படை பிரச்னைகளான சட்டம்- ஒழுங்கை சீா்படுத்துவதிலும், போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024