கிண்டல்களுக்குப் பதிலளித்த மனு பாக்கர்!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர்.

மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

விருது வென்ற மனு பாக்கர் இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான வெற்றி: ஆஸி.யின் ஆதிக்கம் நிறுத்தம்! பட்டியலில் இல்லாத இந்தியா!

சமூக வலைதளங்களில் மனு பாக்கரை கிண்டல் செய்து வந்தனர். எங்கு சென்றாலும் இந்தப் பதக்கங்களுடன் செல்வதா என சிலர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

Manu bhaker pic.twitter.com/crqZoa2A0T

— Aman. (@imb0yaman) September 17, 2024

இந்நிலையில், இதற்கு பதிலடியாக தனது எக்ஸ் பக்கத்தில் மனு பாக்கர் கூறியதாவது:

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் வென்ற இரண்டு வெண்கல பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது. எப்போதெல்லாம் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்து, பதக்கங்களைக் காண்பிக்க சொல்கிறார்களோ அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமையுடன் காண்பிப்பேன். இது என்னுடைய அழகான பயணத்தைப் பகிரும் ஒரு வழிமுறையாகும் என்றார்.

The two bronze medals I won at the Paris 2024 Olympics belong to India. Whenever I am invited for any event and asked to show these medals, I do it with pride. This is my way of sharing my beautiful journey.@Paris2024#Medals#Indiapic.twitter.com/UKONZlX2x4

— Manu Bhaker (@realmanubhaker) September 25, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024