குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

காந்திநகர்,

குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்த 55 பக்தர்கள் சென்ற சொகுசு பஸ், கோலியாக் கிராமத்தில் உள்ள தரைபாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கியது.

இது குறித்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்நகர் பேரிடர் மீட்பு படையினர் தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பஸ்சில் இருந்து தமிழக பக்தர்களை டிரக் மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக பக்தர்கள் கோலியாக் கிராமத்தில் அருகில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோவிலுக்கு சென்று விட்டு பாவ்நகரை நோக்கி திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாவ்நகர் பேரிடர் மேலாண்மைப் பிரிவு துணை மாமலதார் சதீஷ் ஜம்புச்சா தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு காவல்துறை மூத்த அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024