2
நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.
தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கைகளில் டாட்டூவுடன் இருக்கும் அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
வைரலாகும் அஜித் – ஷாலினி விடியோ!
இந்தத் தோற்றம் அஜித் ரசிகர்களைக் கவர்ந்ததுடன். குட் பேட் அக்லியின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.