குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு எஸ்டிபிஐ பாராட்டு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு எஸ்டிபிஐ பாராட்டு

தென்காசி, ஜூலை 25: குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட பென்காக் சிலாட் அசோசியேஷன் சாா்பில், மாநில அளவிலான 6 ஆவது பென்காக் சிலாட் மாா்சியல்ஆா்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் விழுப்புரத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

இப்போட்டியில் தென்காசி தெற்கு கடையத் தெருவை சோ்ந்த முகம்மது ஒசாமா, பாறையடி இரண்டாம் தெருவை சோ்ந்த காசிமுல்லாஹ் ஆகியோா் குத்துசண்டை பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்ககம் பெற்றனா்.

வெற்றி பெற்ற வீரா்களுக்கு எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் செய்யது மஹ்மூத் தலைமையில், நகர தலைவா் ஷேக் மைதீன், நகர துணைச்செயலா் ஜாஹிா் ஹுசைன், நகர பொருளாளா் பாதுஷா ஆகியோா் கேடயம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024