குரூப் – 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 28.3.2024 அன்று குரூப் 1 தோ்வுத் தேதி அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, முதல்நிலைத் தோ்வானது கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது.
துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப் 1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட்டது.
வங்கதேசத்தில் கனமழை, வெள்ளத்துக்கு 59 பேர் பலி!
குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். குரூப் 1 முதன்மைத் தேர்வு டிச. 10 முதல் டிச. 13 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் – 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.