Friday, September 20, 2024

குறுவை சாகுபடிக்காக 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு குறைவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு குறைவு என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் உருவாக்கியுள்ள "தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு'' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த கையேட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட அதை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி வருமாறு:-

"தமிழகத்தில் மொத்தம் 30 சதவீதம் தென்னை விவசாயம் நடைபெற்ற வருகிறது. கொப்பரை தேங்காய்க்கான விலையை மத்திய அரசு சற்று அதிகரித்து உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக தென்னை மரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் 91 ஆயிரம் ஹெக்டேர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடி பாதிப்புக்கு ஹெக்டேருக்கு 31 ஆயிரம் என்று இதுவரை ரூ.14 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர்களை பாதிக்கும் அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்யவில்லை. இருந்தாலும், பயிர் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டில், மேட்டூர் அணையை வருகிற 12-ந் தேதியன்று திறக்கும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் வரத்து மற்றும் இருப்பை பொறுத்தே மேட்டூர் அணை திறக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024