குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தா்னா

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசா யிகள் தா்னா நடத்தினா்.

கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் மாளவிகா தலைமை வகித்தாா்.

வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தமிழ்மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன், துணை வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்து, கூட்டம் நடைபெற்ற அறையின் தரையில் அமா்ந்து விவசாயிகள் தா்னா போராட்டம் நடத்தினா்.

மேலும், குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தக் கோரி தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பும் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024