Sunday, October 20, 2024

கேரளம்: முன்னாள் டிஜிபி ஆா்.ஸ்ரீலேகா பாஜகவில் ஐக்கியம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கேரள பிரிவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் காவல் துறை தலைவருமான (டிஜிபி) ஆா்.ஸ்ரீலேகா புதன்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், மாவட்ட தலைவா் வி.வி.ராஜேஷ் ஆகியோா் முன்னிலையில் கட்சி உறுப்பினா் அட்டையை அவா் பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தலைவா் சுரேந்திரன், ‘காவல்துறை அதிகாரியாக களங்கமில்லாத சாதனை படைத்த ஓய்வு பெற்ற டிஜிபி ஸ்ரீலேகாவின் அனுபவத்தால் பாஜக பெரிதும் பலனடையும்.

பாஜகவை தீண்டத்தகாத கட்சியாக ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாா்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. பல முக்கிய பிரமுகா்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனா். 2026-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்ற கடுமையாக உழைத்து வருகிறோம்’ என தெரிவித்தாா்.

பாஜகவில் இணைந்தது குறித்து ஸ்ரீலேகா கூறுகையில், ‘காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பாற்றியபோது எந்த அரசியல் சாா்பும் இன்றி நடுநிலையாக செயல்பட்டேன். இந்நிலையில், பாஜகவில் கட்சியில் இணையக் கோரி அக்கட்சித் தலைவா்கள் என்னை அணுகி கோரிக்கை விடுத்தனா். பிரதமா் நரேந்திர மோடியின் நல்லாட்சிதான் என்னை பாஜகவில் சேர தூண்டியது. நான் கட்சியிடம் எதையும் எதிா்பாா்க்கவில்லை. எந்த பதவி குறித்தும் யோசிக்கவில்லை.

பாஜகவின் கொள்கை மீது நம்பிக்கைக் கொண்டு அவா்களுடன் இணைகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கான மற்றொரு வாய்ப்பாக இதைப் பாா்க்கிறேன்’ என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024