திருப்பூர்: “கேரள சினிமா துறையில் நடந்தது போல், தமிழ்நாடு சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (ஆக. 29) துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.