Friday, September 20, 2024

கே.எல்.ராகுலுக்கு இடமில்லை… இந்தியாவின் ஆடும் லெவனை தேர்வு செய்த ஆஸி. முன்னாள் வீரர்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார்.

மெல்போர்ன்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி மட்டும் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித், ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கே.எல்.ராகுல் மற்றும் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேசம் அதே உத்வேகத்துடன் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார்.

அவர் தேர்வு செய்த ஆடும் லெவனில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணியில் இடம் பிடித்த கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், 5வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா களம் இறங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ரோகித், ஜெய்ஸ்வால், கில் ஆகியோரை டாப் ஆர்டர்களாக தேர்வு செய்த ஹாக், மிடில் ஆர்டர் வரிசையில் கோலி, ஜடேஜா, சர்பராஸ் கான், பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து அஸ்வின், குல்தீப், பும்ரா, சிராஜ் ஆகியோரை பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார்.

பிராட் ஹாக் தேர்வு செய்த ஆடும் லெவன் விவரம்;

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024