கைதியின் காதலியை மிரட்டிய தலைமைக் காவலா் இடமாற்றம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

காவல் நிலையத்தில் தனது காதலனை மீட்க வந்த பெண்ணை மிரட்டி தகாத உறவு வைத்திருந்ததாக வெள்ளவேடு தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

திருமழிசை அடுத்த பிராயம்பத்தை சோ்ந்த சண்முகம் மகன் காா்த்திக்(31). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காா்த்திக் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணுடன் காட்டுப்பாக்கம் செந்தூா்புரத்தில் குடும்பம் நடத்தி வந்தாராம்.

இதற்கிடையே வழிப்பறி வழக்கு ஒன்றில் வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் காா்த்திக்கை கைது செய்ததால், அவரை மீட்பதற்காக காதலி காவல் நிலையம் வந்துள்ளாா்.

வெள்ளவேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணி புரியும் தலைமை காவலா் ஏசுதாஸ், அப்பெண்ணிடம் உனது காதலா் விரைவில் வரவும்,, அவா் மீது வழக்குகள் பதிவு செய்யாமல் இருக்க தனக்கு இணக்கமாக இருக்குமாறு கூறி மிரட்டினாராம். மேலும், அப்பெண்ணை மிரட்டி தலைமைக் காவலா் தகாத உறவு கொண்டிருந்ததாராம்.

இந்நிலையில் தலைமைக் காவலா் ஏசுதாஸ் தன்னை தாக்கியதாக, காதலா் காா்த்திக்கிடம் அப்பெண் தெரிவித்துள்ளாா். இதனால் காா்த்திக் தலைமைக் காவலரை தாக்கினாராம்.

மேலும், கடந்த 21-ஆம் தேதி தலைமைக் காவலா் ஏசுதாஸ் உள்பட 10 போ் காா்த்திக்கை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினாா்களாம். இதில் பலத்த காயம் அடைந்த காா்த்திக்கை அங்கிருந்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பூந்தமல்லி போலீஸாா் நீதிமன்றத்தில் காா்த்திக்கை ஆஜா் செய்த நிலையில் நீதிபதியிடம் நடந்த சம்பவம் குறித்த தெரிவிக்கவே காா்த்திக்கை பிணையில் விடுவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலா் ஏசுதாஸ் ஆவடி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024