Saturday, September 28, 2024

கொலை முயற்சி: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

கொலை முயற்சி: இளைஞருக்கு
7 ஆண்டுகள் சிறைசாத்தூா் அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சாத்தூா் அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை கோட்டைப்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மனைவி முத்துமாரி (32). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.

கணவா் அவரை வீட்டுக்கு அழைத்தபோது, அவருடன் முத்துமாறி செல்ல மறுத்து வந்தாா். ஆனால், கணவருடன் செல்லுமாறு முத்துமாரியின் சகோதரா் முனியசாமி மகன் மாரிச்சாமி (24) அவரை வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு கணவருடன் செல்ல மறுத்த முத்துமாரியை மாரிச்சாமி கத்தியால் குத்தினாா்

இந்த சம்பவம் தொடா்பாக ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாரிச்சாமியை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மாரிச்சாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.

You may also like

© RajTamil Network – 2024