கொலை வழக்கில் பிணையில் வந்தவா் பட்டாக்கத்தியுடன் கைது

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

கொலை வழக்கில் பிணையில் வந்தவா் பட்டாக்கத்தியுடன் கைதுபட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த நிலையில், போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் கொலை வழக்கில் பிணையில் வந்தவா் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பட்டாக்கத்தியுடன் பதுங்கி இருந்த நிலையில், போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை காஜா தெரு ரயில்வே தண்டவாளம் பகுதியில் ஜெய்ஹிந்த்புரம் உதவி ஆய்வாளா் சேதுராமன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா்.

அங்கு பட்டாக்கத்தியுடன் பதுங்கியிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா் எம்.கே.புரம் பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் ( 46) என்பதும், கொலை வழக்கில் கைதாகி பிணையில் வந்த நிலையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பட்டாக்கத்தியுடன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024