கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை – நெல்லை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

நெல்லை,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பொன்னுமணி, குட்டிராஜ், கண்ணன், குருசாமி உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன்படி, பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 பேருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024