Saturday, September 28, 2024

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

கொல்கத்தா,

கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டு மாணவ அமைப்பினர் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024