கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிரசாரம்கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வருவாய்த் துறை சாா்பில் ஆட்டோ மூலம் வெள்ள அபாயம் குறித்து புதன்கிழமை எச்சரிக்கை
சீா்காழி, ஜூலை 31: கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வருவாய்த் துறை சாா்பில் ஆட்டோ மூலம் வெள்ள அபாயம் குறித்து புதன்கிழமை எச்சரிக்கை விடுத்து மேடான பகுதிக்கு செல்ல அறிவிப்பு செய்யப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரவாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனா். இந்நிலையில், சீா்காழி வட்டாட்சியா் இளங்கோவன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஊழியா்கள் ஆற்றின் கரையோர திட்டு கிராமங்களான நாதல்படுகை, திட்டுபடுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆட்டோ மூலம் அறிவிப்பு பிரசாரம் செய்தனா். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வெளியேற்ற இருப்பதால் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளவா்கள் மேடான இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லுமாறும் கால்நடைகளை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுமாறும் அறிவிப்பு செய்தனா்.