கோவை – அபுதாபி நேரடி விமான சேவை தொடக்கம்: 163 பயணிகள் வருகை; 168 பேர் புறப்பாடு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

கோவை – அபுதாபி நேரடி விமான சேவை தொடக்கம்: 163 பயணிகள் வருகை; 168 பேர் புறப்பாடு

கோவை: கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் இன்று (ஆக.10) முதல் கோவை – அபுதாபி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.40 மணிக்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் 163 பயணிகள் வந்தனர். மீண்டும் காலை 7:30 மணிக்கு கோவையில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் அபுதாபி புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து கோவை தொழில்துறையினர் கூறும்போது, “கோவை- அபுதாபி இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு உலக நாடுகளுக்கு கோவையிலிருந்து செல்ல இந்த விமான சேவை பெரிதும் உதவும்” என்றனர்.

You may also like

© RajTamil Network – 2024