சர்ச்சை கருத்து தெரிவித்த தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக நடிகர் நாகர்ஜூனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் பேசிய தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ்தான் காரணம் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
இதையும் படிக்க: காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி. : ஒரு மணி நேரத்தில் நடந்தது என்ன?
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு நடிகர் நாகர்ஜுனா கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். நடிகை சமந்தாவும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார்.