Saturday, September 21, 2024

“சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தவறினால்…” – ராகுல் காந்தி எச்சரிக்கை

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

புதுடெல்லி,

சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வை மேற்கோள்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மோடி ஜி, சாதிவாரிக் கணக்கெடுப்பை நீங்கள் நிறுத்த நினைப்பது கனவு போன்றது. இப்போது எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது!

இந்தியாவின் உத்தரவு வந்துவிட்டது – விரைவில் 90 சதவீத இந்தியர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து கோரிக்கை வைப்பார்கள்.

உத்தரவை இப்போதே நடைமுறைப்படுத்துங்கள், இல்லையேல் அடுத்த பிரதமர் இதை செயல்படுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள்

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024