சிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்ற அணி..! டு பிளெஸ்ஸி கூறியதென்ன?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) டு பிளெஸ்ஸியின் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை கோப்பையை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் ஹிம்ரான் தாஹிர் தலைமையிலான அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 138/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரிடோர்யஸ் 25, ஷாய் ஹோப் 22 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய செயிண்ட் லூசியா அணி 18.1 ஓவரில் 139/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஆரோன் ஜோன்ஸ் 48, ரோஸ்டன் சேஸ் 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

சிபிஎல் வரலாற்றில் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை வென்றது. மெஸ்ஸி, ரோஹித் சர்மா பாணியில் டு பிளெஸ்ஸி கொண்டாடினார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் டு பிளெஸ்ஸி கூறியதாவது:

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு – பிலிப் 4:13.

செயிண்ட் லூசியா அணிக்கு முதல் கோப்பை. தொடக்கத்தில் இந்த அணியைப் பார்த்து யாரும் கோப்பையை வெல்லுவார்கள் எனக் கூறவில்லை. ஆனால், அணியின் முயற்சியினாலும் எங்களது நம்பிக்கையினாலும் இதைச் சாத்தியமாக்கினோம். அணியினைரை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார்.

I can do all things through Him who gives me strength- Phil 4:13.
1st ever CPL trophy for @SaintLuciaKings . A team that no one looked at in the beginning and said these guys will bring the trophy home but through teamship and belief we did it !!!
So proud of everyone !!! pic.twitter.com/jeek86VQz1

— Faf Du Plessis (@faf1307) October 7, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024