Tuesday, October 1, 2024

சிபிஐ கைது : உச்சநீதிமன்றத்தை நாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு : சிபிஐ கைது எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுசெந்தில் பாலாஜி - உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி – உச்சநீதிமன்றம்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ தம்மை கைதுசெய்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் மதுபானக் கொள்கையை வகுப்பதில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, இதுதொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. எனினும், இதே வழக்கில் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. சிபிஐ கைது செய்ததை எதிர்த்து, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

விளம்பரம்
பாலுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய 9 உணவுகள்.!
மேலும் செய்திகள்…

இந்நிலையில், சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிபிஐ கைது நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது என்று கெஜ்ரிவால் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Arvind Kejriwal
,
CBI
,
Supreme court

You may also like

© RajTamil Network – 2024