12
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டவா் போக்ஸோவில் கைது சேரன்மகாதேவி மேலகுன்னத்தூா் பகுதியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டவரை போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி, ஜூலை 26:
சேரன்மகாதேவி மேலகுன்னத்தூா் பகுதியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டவரை போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
மேல குன்னத்தூா், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் தமிழ் பாண்டி(50). இவா் அப்பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடந்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி வழக்குப் பதிந்து, விசாரித்து, தமிழ்பாண்டியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.