Saturday, September 21, 2024

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

by rajtamil
0 comment 41 views
A+A-
Reset

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 2024-25 மானிய கோரிக்கை தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளுடன் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று (14.06.2024) கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம், (TANSTIA), அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEMA), தலித் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை (DICCI), தோல் ஏற்றுமதி கவுன்சில் (CLE) கான்படெரேஷன் ஆஃப் அஃபர்மேட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் (CAI), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (MADITSSIA), திருச்சி மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு (ACTIV) ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக, புதிய சிட்கோ தொழிற்பேட்டை கோரிக்கைகள், GST ஆலோசகர்கள் நியமனம், SC/ST கொள்முதல் கொள்கை, குறு மற்றும் சிறு வசதியாக்கல் குழுமங்கள், தொழிற்பேட்டை உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், தொழிலை நவீனப்படுத்த மானியம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழிலாளர்களுக்கு பயிற்சி மானியம், சிட்கோ, தொழிற்பேட்டைகளுக்கு பேருந்து வசதி, SC/ST தொழில்முனைவோர்களுக்கு சிட்கோ தொழில்மனை ஒதுக்கீடு அதிகரித்தல், நில வகைகளை தொழில் மனைகளாக பெயர் மாற்றம் செய்வது, இணையதள சேவைகள் மேம்படுத்துதல் என பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

தொழிற்கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், சோ.மதுமதி, இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல் ராஜ், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்யா நீலம், இ.ஆ.ப., உயர் அரசு அலுவலர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024