சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, நடிகர் சூர்யா, படத்தின் நாயகி திஷா பதானி, நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் வட இந்தியாவில் தொடர் புரமோஷன்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா தனது பட புரமோஷனில் கலந்துகொண்டு பேசியதாவது:
நான் சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்தேன். இப்போது தெரிகிறதா நான் ஏன் சிவாவை விடவில்லை என்று புரிகிறதே எனக் கூறியதாக பேசினார்.
சிவா நடிகர் அஜித்துடன் தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.