செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

இறுதிப்போட்டியில் யூகி பாம்ப்ரி – அல்பனோ ஒலிவெட்டி ஜோடி , சாடியோ டொம்பியா – பேபியன் ரிபோல் ஜோடியுடன் மோதியது.

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி , பிரான்சின் சாடியோ டொம்பியா – பேபியன் ரிபோல் ஜோடியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-6, 6-4 , 4-10 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்தது . சாடியோ டொம்பியா – பேபியன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

You may also like

© RajTamil Network – 2024