செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியான விஷயம்: அமைச்சர் ரகுபதி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இது குறித்து புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியான விஷயம். செந்தில் பாலாஜியின் 15 மாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் இந்த நிபந்தனை ஜாமீன்; அதனை வரவேற்கிறோம். செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது.

அமலாக்கத்துறை வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளது ஆனால் எந்த வழக்கிலும் அவர்கள் வெற்றி பெற்றது கிடையாது; எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளார்கள்?. வழக்குகளை மட்டும்தான் அமலாக்கத்துறையினர் போடுவார்கள், இறுதி தீர்ப்பு வரை அவர்கள் செல்ல மாட்டார்கள். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது குறித்து கட்சி தலைமை முடிவெடிக்கும்.. முதல்-அமைச்சர் அறிவிப்பார். எங்களுக்கு அதைபற்றி கருத்து கூற இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024