Monday, September 23, 2024

செந்தில் பாலாஜியின் காவல் 44வது முறையாக நீட்டிப்பு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

செந்தில் பாலாஜியின் காவல் 44வது முறையாக நீட்டிப்புமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 44வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜிசெந்தில் பாலாஜிகோப்புப் படம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 44வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 8) உத்தரவிட்டது.

சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் ஜூலை 10 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜூலை 8ஆம் தேதியுடன் (இன்று) நிறைவடைந்தது. இந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 10 வரை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் 44-ஆவது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் வழக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024