Saturday, September 21, 2024

சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

இஸ்தான்புல் நகரில் இருந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு இ-மெயில் மூலம் 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் விமானத்தில் இருந்து பயணிகளின் உடைமைகளை ஓடுதளத்தில் இறக்கிவைத்து சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு விமானத்தில் வெடிகுண்டு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் வந்த இ-மெயில் முகவரியை ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த ஆய்வில் இஸ்தான்புல் நகரில் இருந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் வந்த எமிரேட்ஸ் விமானமானது இன்று இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து துபாய் புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024