Tuesday, September 24, 2024

சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

சென்னையில் நாளை மறுநாள் (16.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:-

அடையாறு: காந்தி நகர் (பகுதி). கேனால் பேங்க் சாலை, காந்தி நகர் 2வது பிரதான சாலை, 3வது கேனால் குறுக்கு சாலை.

மணலி: நெடுஞ்செழியன் சாலை, கலைஞர் நகர், சி.பி.சி.எல். நகர், பாட சாலை தெரு ஒரு பகுதி,வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி, எலந்தனூர், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்.எம்.டி.ஏ. முதல் மற்றும் இரண்டாம் கட்டம், துவாரகா நகர். ஆண்டார்குப்பம் சோதனைச் சாவடி, ஏ.சி.சி. மெயின் ரோடு, மெட்டல் & இந்தோ டெக், சாத்தங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், வி.பி. நகர், பெரிய தோப்பு, சின்னமாத்தூர் சாலை, வ.ஊ.சி. நகர், புதுக்கோயில் தெரு, சந்தான கிருஷ்ணன் சாலை, விமலாபுரம் மற்றும் ஐ.ஏ.எல். தொழிற்சாலை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024