Tuesday, September 24, 2024

சென்னையில் நாளை முதல் விதிமீறல் பதாகைகளை அகற்றும் பணி தொடக்கம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

விதிமீறல் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில், நாளை முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து நாளை முதல், விதிமீறல் விளம்பர பதாகைகளை மாநகராட்சி பணியாளர்களே அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024