Friday, September 20, 2024

சென்னையில் 11-ந்தேதி காங்கிரஸ் பொதுக்குழு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

11-ந்தேதி தேனாம்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசியலில் வலிமை மிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11-ந்தேதி தேனாம்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை புரிந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறுவதற்கு அனைவரும் தவறாமல் வருகை புரியும்படி அன்புடன் அழைக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024