சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த மிரட்டலை தொடர்ந்து, மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல் துறையினர் இன்று காலை சோதனை செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!

மாணவர்கள் விடுத்த மிரட்டல்

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பள்ளி மாணவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சமீபகாலமாக, சென்னை விமான நிலையம், தமிழக முதல்வர் சென்ற விமானம் என தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024