0
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கே.ஆர்.ஸ்ரீராமை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர், தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
இதேபோல தில்லி, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, கேரளம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.