Sunday, October 27, 2024

சென்னை ரிசர்வ் வங்கியில் காவலரின் துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி தானாக சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை திடீரென ஆபத்து அலாரம் ஒலித்துள்ளது.

உடனே பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டுள்ளார். தொடர்ந்து வங்கி வளாகம் முழுவதும் சென்று பார்த்ததில் பிரச்னை ஏதும் இல்லை எனத் தெரிந்தது.

இதையும் படிக்க | மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்: விஜய் ட்வீட்

பின்னர் அவர் துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி தானாகவே சுட்டதில் ஒரு தோட்டா எதிரே சுவரின் மீது துளைத்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இருப்பினும் அலாரம் அடித்தது, துப்பாக்கி வெடித்தது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024