சென்னை, 16 மாவட்டங்களில் இரவு 7 வரை மழைக்கு வாய்ப்பு!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சென்னை, 16 மாவட்டங்களில் இரவு 7 வரை மழைக்கு வாய்ப்பு!சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு 7 வரை மழைக்கு வாய்ப்பு.கோப்புப்படம்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நீலகிரியில் அதிகனமழையும், கோவையில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கை வெளியாகியுள்ளது.

மேலும், முக்கிய நகரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024