Saturday, September 21, 2024

செய்திகள் சில வரிகளில்……

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

* சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில், நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார்.

* திருப்பத்தூரில் பள்ளி வளாகத்தில் புகுந்த சிறுத்தையை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

* விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க. சார்பில் சி. அன்புமணி போட்டியிடுகிறார். தற்போது இவர் பா.ம.க. மாநில துணைத்தலைவராக உள்ளார்.

* நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகம் மீது தாக்குதல் – வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.

* டி20 உலகக்கோப்பை; உகாண்டாவை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

* ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

* 2024-2025-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட் ஜூலை 22-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பரபரப்பான ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா

* 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

* தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024