சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா..! பிசிசிஐ புகழாரம்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் அரை சதமடித்துள்ளார்.

124 மீட்டருக்கு சிக்ஸர்! சிபிஎல் தொடரில் அதிரடி! (விடியோ)

ஜடேஜா- அஸ்வின் கூட்டணி

144க்கு 6 விக்கெட்டுகள் எடுத்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் – ஜடேஜா இணை தூக்கி நிறுத்திவருகிறது. தனது1 5ஆவது அரைசதத்தை அஸ்வின் நிறைவு செய்துள்ளார். 61 ஓவர் முடிவில் இந்திய அணி 243/6 ரன்கள் எடுத்துள்ளது.

அஸ்வின் – ஜடேஜா

இதில் அஸ்வின் 54* (61 பந்துகளில்), ஜடேஜா 41 (55 பந்துகளில்) ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.

இது குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தில் கொளுத்தும் அஸ்வின் அண்ணா தனது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். இது அவரது 15ஆவது டெஸ்ட் அரைசதம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆஸி.யின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆடம் ஸாம்பா..! மிட்செல் மார்ஷ் புகழாரம்!

மண்ணின் மைந்தன் அஸ்வின்

சமூக வலைதளங்களில் அஸ்வினை ஆஷ் அண்ணா (Ash anna) என்று அழைப்பது வழக்கம். அஸ்வின் அண்ணா என்பதன் சுருக்கமாக இப்படி ரசிகர்கள் அழைப்பார்கள். இதை பிசிசிஐ பயன்படுத்தியிருப்பது தமிழர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம் மண்ணின் மைந்தன் அஸ்வின் நன்றாக விளையாடுவது சென்னை ரசிகர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ash Anna lighting up the Chepauk with a cracking half-century.
This is his 15th FIFTY in Test cricket.
Live – https://t.co/fvVPdgXtmj… #INDvBAN@IDFCFIRSTBank | @ashwinravi99pic.twitter.com/KIK8EFV1Yw

— BCCI (@BCCI) September 19, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024