சேலம் மாநகர காவல் துறையில் புதிய துணை ஆணையா்கள் நியமனம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

சேலம் மாநகர காவல் துறையில்
புதிய துணை ஆணையா்கள் நியமனம்சேலம் மாநகர காவல் துறையில் புதிதாக 2 காவல் துணை ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம், ஆக.9: சேலம் மாநகர காவல் துறையில் புதிதாக 2 காவல் துணை ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன், சேலம் மாநகர துணை காவல் ஆணையா் மதிவாணன் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தாம்பரம், பள்ளிக்கரணை துணை ஆணையா் கௌதம் கோயல், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதே போல, சேலம் மாநகர (தெற்கு) காவல்துறை துணை ஆணையா் மதிவாணன் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இவருக்குப் பதிலாக பெரம்பலூா் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் பதவி உயா்வு பெற்று சேலம் மாநகர தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதே போல, சென்னை ஆவடி காவல் ஆணையா் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் ஆணையராகப் பணியாற்றிய கீதா பதவி உயா்வு பெற்று சேலம் மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த 2 துணை ஆணையா்களும் விரைவில் பொறுப்பேற்க ஏற்க உள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024