ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள்: அமித் ஷா!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தல்

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெற்றுவருகிறது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க இருக்கின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டத் தோ்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

அமித் ஷா எக்ஸ் தளப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீரின் 2-ஆம் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ள அனைத்து வாக்காளர்களும் பயங்கரவாதம் இல்லாத மற்றும் வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அதிகளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோர், பெண்களின் உரிமைகளுக்காகவும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசுக்கு வாக்குகளை செலுத்துங்கள்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், வாரிசு அரசியல், ஊழலில் இருந்து விடுவிக்கவும் இன்றே வாக்களியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024