ஜம்மு-காஷ்மீரில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 59 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஜம்மு-காஷ்மீரில் 26 பேரவைத் தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாலை 7 மணி நிலவரப்படி, 54.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3,502 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள 6 மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக பதிவாகியுள்ள வாக்கு சதவிகிதம், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கண்ட இடங்களில் பதிவாகியிருந்த வாக்கு சதவிகிதத்தை விட கூடுதலாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று(செப்.25) நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 56.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஓரிரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், அதன்பின் துல்லியமான வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.