ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிடவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 6) மாலை 4 மணியளவில் வெளியிடவுள்ளார். மேலும், இரண்டு நாள் பயணமாக, ஜம்மு-காஷ்மீருக்கு வரும் அமித் ஷா, வருகிற சனிக்கிழமையில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
அமித் ஷா வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில், 370 ஆவது பிரிவு, வேலைவாய்ப்புகள், மேற்கு பாகிஸ்தானிய அகதிகள், காஷ்மீர் பிராமணர்களுக்கான சிறப்புத் தொகுப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது முதலானவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சித்தராமையாவுக்கு பதிலாக முதல்வராக? கர்நாடக காங்கிரஸ் குழப்பம்
பாஜகவின் முக்கிய நகரமாக விளங்கும் ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தொடங்கி வைக்கும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உள்பட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுதவிர, ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து பெறும் வரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டின் துணைத் தலைவருமான ஓமர் அப்துல்லா சபதம் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஓமர் அப்துல்லா தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த வியாழக்கிழமையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.