Tuesday, September 24, 2024

ஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

ஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

காஞ்சீபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "திமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ. ஆனால் திமுகவினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும். முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதல்-அமைச்சர் ஆவது எம் ஜி ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது" என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை. மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?. உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நாகூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024