டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டம் – செல்வப்பெருந்தகை கண்டனம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடந்ததற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தொலைக்காட்சி நிலையமான 'டிடி தமிழ்' சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களை ஒட்டி ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், நாளை நடைபெறும் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே பொதிகை என்ற பெயர் மாற்றப்பட்டதற்கும், லோகோ காவி நிறத்தில் மாற்றப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடந்ததற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்கெனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவியையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின்…

— Selvaperunthagai K (@SPK_TNCC) October 17, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024