டி.என்.பி.எல்: திருப்பூர் – திண்டுக்கல் ஆட்டம் – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் – திண்டுக்கல் அணிகள் மோத உள்ளன.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் கோவையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து தற்போது அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Toss delayed due to rain. ️ Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#IDTTvDD#TNPL2024#NammaOoruAattam#NammaOoruNammaGethupic.twitter.com/b9HGsWKlqz

— TNPL (@TNPremierLeague) July 17, 2024

You may also like

© RajTamil Network – 2024