டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆளுநர் ஆர்.என்.ரவி
டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார். 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஆளுநர் ரவி, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறை, தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலை பெற்றது போன்றவற்றுக்காக மகிழ்ச்சி அடைவதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
விளம்பரம்
இதையும் படிங்க:
மனைவி உட்பட 42 பெண்கள் கொடூர கொலை… குப்பை கிடங்கை சவக்குழியாக மாற்றிய சைக்கோ கில்லர்… அதிர்ச்சி சம்பவம்!
வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
PM Modi
,
Tamil Nadu Governor