Monday, September 23, 2024

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.10) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, திங்கள்கிழமை நண்பகல் ஒடிஸா மாநிலம் பூரிக்கு அருகே கரையைக் கடந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழக வானிலை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (செப்.10) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதன் முதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.11-15) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லாா், சேலம் மாவட்டம் மேட்டூா் தலா 30 மி.மீ. மழை பதிவானது. டேனிஷ்பேட்டை (சேலம்), சின்கோனா, வால்பாறை, சோலையாா் (கோவை) தலா 20 மி.மீ., வானூா் (விழுப்புரம்), இரணியல் (கன்னியாகுமரி), மணலூா்பேட்டை (கள்ளக்குறிச்சி), நாலுமுக்கு (திருநெல்வேலி), மேட்டூா் (சேலம்) தேவாலா, அவலாஞ்சி (நீலகிரி), மணம்பூண்டி (விழுப்புரம்), பெரியாறு (தேனி), காக்காச்சி (திருநெல்வேலி), தலா 10 மி.மீ.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமை(செப்.10, 11) வரை மன்னாா் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024