Tuesday, September 24, 2024

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் இரவு 7 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024